ரயிலில் கேட்பாரற்று கிடந்த 48 லேப்டாப் , 32 போன்கள்
சென்னை:விழுப்புரம் ஜங்ஷன் பகுதியில் இருந்து மேற்குவங்க மாநிலம் வரை செல்லும் விரைவு ரயில், சென்னை, பெரம்பூர் ரயில் நிலைய நடைமேடை 2ல், நேற்று மதியம் 2:00 மணியளவில் வந்தது.
அப்போது, பெரம்பூர் ரயில்வே போலீசார் ரயில் பெட்டியில் வழக்கமான சோதனை மேற்கொண்டனர். அப்போது, சூட்கேஸ் ஒன்று கேட்பாரற்று கிடந்தது. அதில், 48 மொபைல் போன்கள், 32 லேப்டாப் மற்றும் ஹெட் போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்டவை இருந்தன. யாருடைய உடைமைகள் என்பது தெரியாததால், வழக்கு பதிந்த போலீசார், பொருட்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.