சென்னையில் முதல் நாள் ஒத்திகை நிகழ்ச்சி
75-வது சுதந்திர தின விழாவை வருகிற 15-ந்தேதி, சென்னை கோட்டையில் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு வருகிற 6, 11, 13-ந்தேதிகளில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
இதை முன்னிட்டு ஒத்திகை நடைபெறும் நாட்களில் காலை 6 மணி முதல் ஒத்திகை முடியும் நேரம் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மெரினா கடற்கரை முதல் தலைமை செயலகம் வரை போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதல் நாள் ஒத்திகை நிகழ்ச்சி இன்று தொடங்கியது. காலை தொடங்கிய காவல் துறையினரின் முதல் நாள் ஒத்திகை நிகழ்ச்சியானது தற்போது ராஜாஜி சாலையில் நடைபெற்று வருகிறது. காலை 6 மணிக்கு தொடங்கிய ஒத்திகை நிகழ்ச்சி 9 மணி வரை மேற்கொள்ள உள்ளனர்.75-வது சுதந்திர தின விழா: சென்னையில் முதல் நாள் ஒத்திகை நிகழ்ச்சி