ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் சென்னை மாநகராட்சி கமிஷனர் சாட்சியம்

சென்னை: பத்திரப்பதிவு துறை ஊழியர் லஞ்சம் பெற்ற வழக்கில், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆஜராகி சாட்சியம் அளித்தார். விருதுநகரை சேர்ந்தவர் பாண்டுரங்கன். பிஎஸ்என்எல் ஓய்வு பெற்ற ஊழியர். இவர் கடந்த 2017ம் ஆண்டு தான செட்டில்மென்ட் பத்திரம் தொடர்பாக மாவட்ட பத்திரப்பதிவுத் துறை அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அங்கு பணியாற்றும் ஊழியர் தங்கம் என்பவர் பாண்டுரங்கனிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்றுள்ளார். இதுதொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஊழியர் தங்கம் மீது வழக்கு தொடர அனுமதி அளித்த, அப்போதைய பத்திர பதிவுத்துறை தலைவரும், தற்போதைய சென்னை மாநகராட்சி கமிஷனருமான குமரகுருபரன் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆஜராக வந்ததால் கோர்ட்டில் பரபரப்பான சூழல் நிலவியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *