வட சென்னை மின் நிலையம் 12 நாட்களாக உற்பத்தி நிறுத்தம்
சென்னை, திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில் மின் வாரியத்திற்கு, வட சென்னை விரிவாக்க அனல் மின் நிலையம் உள்ளது. அங்கு தலா, 600 மெகா வாட் திறனில் இரு அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
விரிவாக்க மின் நிலையத்தின் முதல் அலகில், ‘டர்பைன் வைபிரேஷன்’ பழுது காரணமாக இம்மாதம், 1ம் தேதி பகல், 11:14 மணிக்கு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. கோடை காலம் துவங்கியுள்ளதால், மின் தேவை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், முதல் அலகில் இன்னும் மின் உற்பத்தி துவங்கப்படாமல் கடந்த, 12 நாட்களாக உற்பத்தி முடங்கியுள்ளது.