சி.ஐ.டி , காலனியில் ‘டிவி, ஏசி ‘ திருட்டு

சென்னை, சென்னை மயிலாப்பூர், சி.ஐ.டி., காலனி பிரதான சாலையைச் சேர்ந்தவர் துரை, 59; தொழில் அதிபர். இவரின் வீட்டில் பராமரிப்பு பணி நடப்பதால், எல்.இ.டி., ‘டிவி’ மற்றும் நான்கு குளிர்சாதன பெட்டிகளையும், காப்பர் கம்பிகளையும் கழற்றி வீட்டு வளாகத்தில் வைத்துள்ளார். இதன் மதிப்பு, 3.50 லட்சம் ரூபாய்.

மர்ம நபர்கள், பிப்., 20ல், எல்.இ.டி., ‘டிவி’ – குளிர்சாதன பெட்டிகள் மற்றும் காப்பர் கம்பிகளை திருடி சென்றுள்ளனர். இச்சம்பவம், தி.மு.க., – எம்.பி., கனிமொழி வீட்டருகே நடந்துள்ளது.

இதுகுறித்து, மயிலாப்பூர் காவல் நிலையத்தில், துரை புகார் அளித்துள்ளார். எஸ்.ஐ., கார்த்திக் ராஜா சம்பவ இடம் சென்று விசாரித்து உள்ளார். ஆனால், சி.எஸ்.ஆர்., எனப்படும் புகார் ஏற்பு ரசீது கூட தராமல் இழுத்தடித்து வருவதாக, துரை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *