முதியவரின் குடிசைக்கு தீவைத்த வாலிபர் கைது

மாமல்லபுரம், அண்ணாநகரைச் சேர்ந்தவர் கண்ணன், 62. கடந்த பிப்., 28ம் தேதி இரவு, இவரது குடிசையில், தாய் மாணிக்கம்மாளுடன் துாங்கினார்.

நள்ளிரவில் குடிசை தீப்பற்றி எரிந்ததை கண்டு, இரண்டு பேரும் வெளியேறி தப்பினர். குடிசையின் பெரும்பாலான பகுதி எரிந்து, தகவலின்படி வந்த தீயணைப்பு வீரர்கள் மேலும் தீ பரவாமல் அணைத்தனர்.

அதே பகுதியைச் சேர்ந்த காதர், 26, என்பவர், குடிசைக்கு தீ வைத்தது, அருகில் உள்ள வீட்டின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.

இதுகுறித்து கண்ணன் அளித்த புகாரின்படி, மாமல்லபுரம் போலீசார் காதரை மடக்கி விசாரித்த போது, தன்னை கண்ணன் விமர்சித்து பேசியதால், குடிசைக்கு தீ வைத்ததாக தெரிவித்தார். போலீசார் காதரை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *