மெட்ரோ ரயில்களில் 10% கட்டண தள்ளுபடி காகித பயணச்சீட்டு முறை வாபஸ்: நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: மெட்ரோ ரயில்களில் கட்டண தள்ளுபடி காகித பயணச்சீட்டு முறை இன்று முதல் வாபஸ் பெறப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு விற்பனை செய்யும் கவுண்டர்களில் 20 பேர் மற்றும் அதற்கு மேற்பட்ட குழுவிற்கு 10 சதவீதம் தள்ளுபடி கட்டணத்துடன் காகித பயணச்சீட்டாக வழங்கப்பட்டு வந்த குழு பயணச்சீட்டு பெறும் வசதி இன்று முதல் திரும்பப் பெறப்படுகிறது.

டிஜிட்டல் பயணச்சீட்டுக்கு மாறுவதை எளிதாக்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதே குழு பயணச்சீட்டை பயணிகள் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மொபைல் செயலி மூலம் 20 சதவீதம் தள்ளுபடி கட்டணத்துடன் பெற்று கொள்ளலாம் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *