கடையில் திருடிய இருவர் கைது
ஆவடி,ஆவடி அடுத்த வெள்ளானுார் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ், 71; மளிகை கடைக்காரர். இவர், கடந்த 8ம் தேதி, ஷட்டரை உடைத்து, கல்லாவில் இருந்த 11,000 ரூபாயை திருடிச் சென்றனர்.
இதுகுறித்து விசாரித்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், திருட்டில் ஈடுபட்ட போரூர், ஆற்காடு சாலையைச் சேர்ந்த சஞ்சய், 21, மற்றும் சிவமூர்த்தி, 21, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.