தொழில் முனைவோராக ‘மாஜி ‘ வீரர்களுக்கு அழைப்பு

சென்னை,முன்னாள் படை வீரர்கள், அவர்களை சார்ந்தோர் தொழில் முனைவராக உருவாக்கும் வகையில், ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ என்ற புதிய திட்டத்தை, தமிழக அரசு நடைமுறைப்படுத்தியது.

இத்திட்டத்தில், தொழில் துவங்க, 1 கோடி ரூபாய் வரை வங்கி மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது.

இதில், 30 சதவீதம் மூலதன மானியம், 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும்.

சுய தொழில் துவங்க விரும்பும் முன்னாள் படைவீரர்கள், படைப்பணியில் மரணமடைந்த வீரரின் கைம்பெண்கள், சைதாப்பேட்டையில் உள்ள முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *