மூதாட்டியிடம் அத்து மீறிய நபர் கைது
புளியந்தோப்பு:புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி, கடந்த 17ம் தேதி வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தபோது, எதிர்வீட்டில் வசிக்கும் சூர்யா, 22, என்பவர் மூதாட்டியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மூதாட்டி புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்து போலீசார், தலைமறைவாக இருந்த சூர்யாவை நேற்று கைது செய்தனர்.