சாலை விபத்தில் எஸ்.ஐ., உயிரிழப்பு
சென்னை,எழும்பூர், எஸ்.ஐ., குடியிருப்பில் வசித்து வந்தவர், தேசிங்கு ராஜா, 56. திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த, 10ம் தேதி காலை நண்பர் தியாகராஜனுடன் இருசக்கர வாகனத்தில், வாலாஜா சாலை வழியாக சென்றார்.
கலைவாணர் அரங்கம் அருகே சென்றபோது, மற்றொரு இருசக்கர வாகனம், அவர்கள் வாகனத்தில் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில், படுகாயமடைந்த தேசிங்குராஜா, ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிந்து, விபத்து ஏற்படுத்திய அன்னை சத்யா நகரைச் சேர்ந்த தினேஷ், 19, என்பவரை கைது செய்து, வாகனத்தை பறிமுதல் செய்தனர்.