ரயிலில் இருந்து தவறி விழுந்து 2 பேர் பலி
பெரம்பூர், ஒடிசாவைச் சேர்ந்த கன்னு பான்சோர், 20, மற்றும் யுமேஷ் பாண்டே, 19, ஆகியோர், வேலை தேடி கேரளா செல்ல, அரக்கோணம் மார்க்கமாக செல்லும் விரைவு ரயிலில், நேற்று பயணம் செய்தனர்.
அப்போது, அம்பத்துார் – பட்டரவாக்கம் ரயில் நிலையம் இடையே விரைவு ரயில் சென்றபோது, இருவரும் ரயிலில் இருந்து தவறி விழுந்தனர். இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இது குறித்து, அம்பத்துார் ரயில்வே போலீசார் கொடுத்த தகவலை தொடர்ந்து, பெரம்பூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரின் சடலத்தையும் கைப்பற்றி, விசாரித்து வருகின்றனர்.