ஜார்க்கண்டில் திருமணமான வடமாநில சிறுமி கர்ப்பம்
புளியந்தோப்பு, ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 17 வயது வாலிபரும், 14 வயது சிறுமியும் கடந்தாண்டு மார்ச் மாதம், அவர்களின் குல வழக்கப்படி பெற்றோர் ஏற்பாட்டில், அவர்களின் சொந்த ஊரில் திருமணம் செய்துள்ளனர்.
மூன்று மாதத்திற்கு முன் 17 வயது வாலிபர் மட்டும், சென்னைக்கு கூலி வேலைக்கு வந்துள்ளார். இந்நிலையில் கர்ப்பமான மனைவியையும் சமீபத்தில் சென்னை அழைத்து வந்துள்ளார்.
அவருக்கு சிகிச்சை அளிக்க, எழும்பூர் மருத்துவமனைக்கு நேற்று சென்ற நிலையில், மருத்துவர்கள் சிறுமியை பரிசோதித்து, அவர் எட்டு மாத கர்ப்பமாக இருப்பதும், அவருக்கு 14 வயதே ஆகிறது என்பதையும் கண்டறிந்தனர்.
இதையடுத்து புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கும், சமூக நலத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தரப்பட்டது. போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.