படகு கவிழ்ந்து விபத்து: மூன்று மீனவர்கள் காயம்

சென்னை, மெரினாவில், பைபர் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், மீனவர்கள் மூவர் காயமடைந்தனர்.

திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர்கள் ரவி, 58, சண்முகம், 58, அருள், 52. மீனவர்களான மூவரும், நேற்று காலை மெரினா கடல் பகுதியில் பைபர் படகில் மீன் பிடிக்க சென்றனர்.

அப்போது, ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நிலைமை உணர்ந்து கடலில் குதித்த மூன்று மீனவர்களும், காயத்துடன் தட்டு தடுமாறி நீச்சலடித்து கரையை அடைந்தனர்.

அங்கிருந்து, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ரவிக்கு இடது விரலிலும், அருளுக்கு தோள் பட்டையிலும், சண்முகத்திற்கு வலது கையிலும் காயம் ஏற்பட்டது. மெரினா போலீசார் விசாரிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *