லாரி மோதி வாலிபர் பலி மற்றொருவர் ‘சீரியஸ்’

திருவேற்காடு, ஆவடி அடுத்த அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் நந்தகுமார், 19. பாடி, புதுநகரைச் சேர்ந்தவர் கிருபாகரன், 19, நண்பர்கள். இருவரும், திருத்தணி முருகன் கோவில் செல்வதற்காக, நேற்று காலை ‘பஜாஜ் பல்சர்’ பைக்கில் கிளம்பியுள்ளனர்.

பூந்தமல்லி நெடுஞ்சாலை, திருவேற்காடு, வேலப்பன்சாவடி அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி மோதியதில், இருவரும் துாக்கி வீசப்பட்டனர். தலையில் பலத்த காயமடைந்த நந்தகுமார், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து சென்ற ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், நந்தகுமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட கிருபாகரன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *