எலக்ட்ரீஷியனிடம் செயின் பறிப்பு

துரைப்பாக்கம்: பெருங்குடியை சேர்ந்தவர் வெங்கடேஷ், (47), எலக்ட்ரீஷியன். இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு துரைப்பாக்கம் எழில்நகரில் உள்ள ஒரு பெண் வீட்டுக்கு போதையில் சென்றார். அதிகாலை வெளியே வரும் போது, வீட்டின் அருகில் ஒரு ஆசாமி நின்று கொண்டிருந்தார். அவர், தன்னை போலீஸ் என, கூறி ‘நீ எங்கிருந்து வருகிறாய். எதற்கு இங்கு வந்தாய்’ என வெங்கடேஷிடம் கேட்டுள்ளார்.

உறவினர் வீடு என வெங்கடேஷ் கூறியுள்ளார். இதையடுத்து, அவர் அணிந்திருந்த இரண்டரை சவரன் தங்க செயினை கழற்றி வாங்கிய அந்த நபர், கண்ணகிநகர் காவல் நிலையம் வந்து வாங்கிக்கொள்’ என, கூறி சென்றுள்ளார். அதன்படி, வெங்கடேஷ், கண்ணகி நகர் காவல் நிலையம் சென்ற போது, அப்படி ஒரு நபர் போலீசாக வேலை செய்யவில்லை என்று தெரிந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், செயின் பறித்து சென்ற மர்ம நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *