வில்லிவாக்கத்தில் திருக்குடை யாத்திரை

வில்லிவாக்கம், ஹிந்து ஆன்மிக சேவா ஸ்மிதி டிரஸ்ட் சார்பில், கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, திருவண்ணாமலைக்கு திருக்குடை யாத்திரை அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

அதில் ஒரு பகுதியாக, திருமுல்லைவாயிலில் இருந்து வந்த திருக்குடை யாத்திரை, நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு வில்லிவாக்கம் பாலியம்மன் கோவில் வழியாக, ஸ்ரீ அகத்தீஸ்வரர்கோவில் வளாகத்தில் இரவு தங்கியது.

பின், நேற்று காலை 8:30 மணிக்கு, அத்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜையுடன் திருக்குடை யாத்திரை துவங்கி, ஐ.சி.எப்., முத்து மாரியம்மன் கோவில் காந்தி நகர் வழியாக, அன்னை சத்யா நகர் குபேர லிங்கேஸ்வரர்கோவில், அண்ணா நகர் சிந்தாமணி விநாயகர் கோவில், மாங்காலிம்மமன் கோவில் வழியாக வந்தது.

என்.எஸ்.கே., வழிவிடு விநாயகர் கோவில், எம்.எம்.டி.ஏ., காலனி முத்துமாரியம்மன் கோவில் வழியாக, வடபழனி முருகன் கோவிலுக்கு சென்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *