மேயர் ராதாகிருஷ்ணன் ஆக்கி மைதானம் – இன்று திறந்து வைக்கிறார் முதல்-அமைச்சர் மு.கஸ்டாலின்
மேயர் ராதாகிருஷ்ணன் ஆக்கி மைதானத்தை முதல்-அமைச்சர் மு.கஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
சென்னை, 7-வது ஆசிய ஆடவர் ஆக்கி கோப்பை – 2023 போட்டி ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 16 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் மீண்டும் நடக்கவுள்ள இப்போட்டியை ஆக்கி இந்தியாவுடன் இணைந்து தமிழ்நாடு அரசு நடத்த உள்ளது. இப்போட்டியில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், மற்றும் கொரியா ஆகிய 6 நாடுகளின் அணிகள் பங்கேற்க உள்ளன.
இந்த போட்டியை சிறப்பாக நடத்த தமிழ்நாடு அரசு சார்பில் 17 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 12 கோடி நிதியை ஆக்கி இந்தியா நிர்வாகிகளிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே வழங்கினார். இந்த ஆக்கி தொடருக்கான எற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில், சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் மேம்படுத்தப்பட்ட ஆக்கி விளையாட்டரங்கம், ஒலிம்பிக் தரத்திலான புதிய செயற்கை இழை மைதானம் மற்றும் கலைஞர் நூற்றாண்டு பார்வையாளர் மாடம் ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று மாலை 6 மணிக்கு திறந்து வைக்க உள்ளார். மைதானத்தின் ஒரு கேலரிக்கு கலைஞர் நூற்றாண்டு பெவிலியன் என பெயர் சூட்டும் விழாவும் நடைபெறுகிறது.