ஜூலை மாதத்திற்கான நீரை வழங்கக் கோரி, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு

ஜூலை மாதம் வழங்க வேண்டிய நீரை வழங்க உத்தரவிடக் கோரி, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பி உள்ளது.

சென்னை, மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளதால் பாசனத்திற்கு திறக்கும் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் காவிரி ஆணையம் மற்றும் சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு அடிப்படையில் கர்நாடக மாநில அரசு தமிழகத்துக்கு தரவேண்டிய தண்ணீரை வற்புறுத்தி பெறுவதற்கான நடவடிக்கைகளை உறுதியோடு அரசு செய்ய வேண்டும் என விவசாயிகளும் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் ஜூலை மாதம் வழங்க வேண்டிய நீரை வழங்க உத்தரவிடக் கோரி, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பி உள்ளது. இதன்படி வழக்கமான அளவை விட குறைவான அளவு தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விடுகிறது என்றும், ஜூலை மாதத்திற்கான 34 டி.எம்.சி. தண்ணீர் பங்கீட்டை திறந்து விட வேண்டும் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *