காவல் உயர் அதிகாரிகள் வாரத்தில் ஒருநாள் பொதுமக்களை சந்திக்கவேண்டும்: அரசாணை வெளியிட்ட தமிழக அரசு..!
பொதுமக்கள் காவல் உயர் அதிகாரிகளை எளிதில் அணுகும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை,
பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் புகார்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளை சந்தித்து புகார்மனுவை அளித்து வந்தனர். இது வழக்கமான முறையாகும். மேலும், பெயரளவில் உயர் அதிகாரிகள் ஒருநாள் சந்திப்பார்கள் என்ற நடைமுறை இருந்துவந்தது.
உயர் அதிகாரிகளை பொதுமக்கள் எளிதில் சந்திக்கும் வகையில் தமிழக அரசு இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.