சென்னையில் பிரபல கொரியர் நிறுவனத்திற்கு சொந்தமான 6 இடங்களில் வருமான வரித்துறை சோதனை…!

சென்னையில் பிரபல கொரியர் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை, தமிழ்நாடு முழுவதும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு புகார் காரணமாக தமிழகத்தில் முக்கிய தொழில் அதிபரிகளின் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னை மண்ணடி, கிண்டியில் உள்ளிட்ட 6 இடங்களில் பிரபல கொரியர் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை ஈடுபட்டுள்ளனர். மேலும், முறையான கணக்குகள் மற்றும் வரி ஏய்ப்பு சந்தேகங்களின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *