கிராம சபை கூட்டம் டி.ஆர்.பாலு எம்.பி. பங்கேற்றார்

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள முடிச்சூரில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி.யுமான டி.ஆர்.பாலு கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டார். இதில் தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் நிருபர்களிடம் டி.ஆர்.பாலு எம்.பி. கூறும்போது, “கிராம சபை கூட்டத்தில் பேசியவர்கள் நிதி பற்றாக்குறை இருப்பதாக கூறினர். அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். முடிச்சூர் பகுதிகளில் மழைகாலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படுவது வழக்கம். அதற்கு முன்னுரிமை கொடுத்து இந்த ஆண்டு அதுபோல் பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தி உள்ளேன்” என்றார்.

இதேபோல் கவுல் பஜார் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *