குப்பை தொட்டியில் இருந்த டம்மி துப்பாக்கியால் பரபரப்பு

கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் அருகே நேற்று அதிகாலை மெட்ரோ ரயில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த குப்பை தொட்டியில் கை துப்பாக்கி ஒன்று இருப்பதை கண்டு துப்புரவு பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோயம்பேடு போலீசார் குப்பை தொட்டியில் இருந்த கை துப்பாக்கியை பறிமுதல் செய்து புதுப்பேட்டையில் உள்ள ஆயுத கிடங்கிற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதனை செய்து பார்த்தபோது இது தீபாவளி மற்றும் சினிமா படப்பிடிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் டம்மி துப்பாக்கி என தெரிய வந்தது. குப்பை தொட்டியில் டம்மி துப்பாக்கியை போட்டது யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *