பா.ஜ., மையக்குழு கூட்டம்; நட்டா தலைமையில் ஆலோசனை!

சென்னையில் பா.ஜ., மையக்குழுக் கூட்டம் தொடங்கியது. முக்கிய நிர்வாகிகளுடன் தேசிய தலைவர் நட்டா ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,, பா.ஜ., ஒன்றிணைந்து போட்டியிடுகிறது. இந்த கூட்டணிக்கு அ.தி.மு.க .,தான் தலைமை என்று அறிவிக்கப்பட்டுவிட, தொடர்ந்து களப்பணிகளில் அக்கட்சி தீவிரமாக இறங்கி உள்ளது.

நேற்று நடந்த அ.தி.மு.க., செயற்குழுக் கூட்டத்தில் தி.மு.க., தான் பொது எதிரி, அதை வீழ்த்த ஒத்த கருத்துடைய கட்சிகளை திரட்டுவது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந் நிலையில் பா.ஜ., தேசிய தலைவர் நட்டா தலைமையில் சென்னையில் தமிழக பா.ஜ., மையக்குழு கூட்டம் இன்று (மே 3) நடைபெற்றது. ஒருநாள் பயணமாக சென்னை வந்திருக்கும் அவர், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில் தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ஜ., பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், பொன். ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், கே.பி. ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில், 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை எப்படி வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *