வெற்றி நிச்சயம் நூல் வெளியீட்டு விழா
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் மீனாட்சி மெட்ரிகுலேஷன் பள்ளி, எஸ்.பி.எம்., டிரஸ்ட், இளங்கோ முத்தமிழ் மன்றம் இணைந்து ‘வெற்றி நிச்சயம்’ நூல் வெளியீட்டு விழா நடத்தினர்.
டிரஸ்ட் நிறுவனர் அழகர்சாமி தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் மகாலிங்கம், தொழிலதிபர் கவுரி முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி வரவேற்றார். நூலாசிரியர் புலவர் சங்கரலிங்கம் எழுதிய ‘வெற்றி நிச்சயம்’ எனும் வாழ்வு முன்னேற்ற நூலை, மணிமேகலை பிரசுர நிர்வாக இயக்குனர் ரவிதமிழ்வாணன் வெளியிட, காரியாபட்டி இன்ஸ்பெக்டர் விஜயகாண்டீபன் பெற்றுக் கொண்டார். ஜனசக்தி பவுண்டேஷன் நிறுவனர் சிவக்குமார், பா.ஜ., நிர்வாகிகள் ஆறுமுகம், ராமலிங்கம், கவிஞர் மகாலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.