பிரைம் சீனியர் ஆடவர் டென்னிஸ் பெசன்ட் நகர் ஜோடிகள் அசத்தல்

பெசன்ட் நகர் கிளப், பிரைம் டென்னிஸ் மற்றும் டென்னிஸ் பிரீமியர் லீக் அமைப்பு இணைந்து, ஆடவருக்கான சீனியர் பிரிவு டென்னிஸ் போட்டியை, கடந்த 26, 27ம் தேதிகளில் நடத்தின.

போட்டிகள், பெசன்ட் நகர் கிளப் டென்னிஸ் அரங்கில் நடந்தன. இதில், 35, 45, 55 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில், தனித்தனியாக நடந்தன.

போட்டியில், சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 80க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *