தாம்பரம் – ராமேஸ்வரத்திற்கு புது ரயில் அட்டவணை வெளியீடு

தாம்பரத்தில் இருந்து திருவாரூர், திருத்துறைப்பூண்டி வழியாக ராமேஸ்வரத்துக்கு ஒரு புதிய ரயில் சேவை துவங்க வேண்டும் என, ரயில்வே அமைச்சரிடம், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கோரிக்கை மனு அளித்தார்.

இதை பரிசீலித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், புதிய ரயில் தினமும் இயக்க அனுமதி அளித்தார். தொடர்ந்து, ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில், இந்த ரயில் சேவை, வரும் 6ம் தேதி துவங்குகிறது. இதற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.

அதன்படி, தாம்பரத்தில் இருந்து வரும் 6ம் தேதி முதல் மாலை 6:10 மணிக்கு புறப்படும் விரைவு ரயில், மறுநாள் அதிகாலை 5:40 மணிக்கு ராமேஸ்வரம் செல்லும்.

ராமேஸ்வரத்தில் இருந்து வரும் 6ம் தேதி மாலை 4:00 மணிக்கு புறப்படும் விரைவு ரயில், மறுநாள் அதிகாலை 3:45 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.

இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8:00 மணிக்கு துவங்கும், என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *