போதைப் பொருள் பதுக்கிய வாலிபர்கள் இருவர் கைது
சென்னை, ராயப்பேட்டை, பீட்டர்ஸ் சாலையில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த இருவரை, ராயப்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் பிடித்தனர்.
அவர்களின் உடைமைகளை சோதனை செய்ததில், 2.8 கிராம் எடையிலான ‘மெத்தகுலோன்’ என்ற போதைப்பொருள் வைத்திருப்பது தெரியவந்தது.
பிடிபட்ட திருவல்லிக்கேணியைச் சேர்ந்த மனோஜ்குமார், 23, கோயம்பேடு சந்தோஷ், 25, ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மனோஜ்குமார் மீது, ஏற்கனவே மூன்று குற்ற வழக்குகள் உள்ளன.