சென்னை, ஆலந்துார் மண்டலம், 163வது வார்டு, ஆதம்பாக்கம், பாலகிருஷ்ணாபுரம் எரிவாயு மயானத்தில், பராமரிப்பு பணி நடைபெற உள்ளது
இதனால், மார்ச் 31 முதல் ஏப்ரல் 24ம் தேதி வரை, மயானம் செயல்படாது. இதனால், 162வது வார்டில் உள்ள கண்ணன் காலனி எரிவாயு மயானத்தை பயன்படுத்த வேண்டும் என, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.