சைபர் குற்றம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
சென்னை, சென்னை, மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் – சென்னை கிறிஸ்துவக் கல்லுாரி மாணவர்களுடன் இணைந்து, அண்ணாநகர் வி.ஆர்.,மால், ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில், சைபர் குற்றம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
அப்போது, டிஜிட்டல் மோசடிகள், ஆன்லைன் முதலீட்டு மோசடி, கடன் செயலி மோசடி, பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், வினாடி – வினா, பிளாஷ் மாப் நடனத்தில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.