1,341 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
திருப்பூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 98.80 சதவீதம் முதல் தவணையும், 77.73 சதவீதம் பேர் 2-வது தவணையும், 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் 88.42 சதவீதம் பேர் முதல் தவணையும், 74.73 சதவீதம் பேர் 2-வது தவணையும், 12 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் 89.56 சதவீதம் பேர் முதல் தவணையும், 64.81 சதவீதம் பேர் 2-வது தவணையும் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
2-வது தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை இலவசமாக வழங்கப்படும். நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 1,341 இடங்களில் நடக்கிறது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிக்கூடங்கள், ஊராட்சி அலுவலகங்கள், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், சுங்கச்சாவடி, தனியார் மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது. இந்த பணியில் 2 ஆயிரத்து 681 பணியாளர்கள், தன்னார்வலர்கள் ஈடுபடுகிறார்கள். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.