தாம்பரம் – மதுரை ரயிலில் கூடுதலாக 4 பெட்டி இணைப்பு
சென்னை, தாம்பரம் – மதுரை இடையே இயக்கப்படும் விரைவு ரயில்களில் நான்கு பெட்டிகள் கூடுதலாக இணைத்து இயக்கப்பட உள்ளது.
தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கை:
* மதுரை – தாம்பரம் இடையே வியாழன், சனிக்கிழமைகளில் இயக்கப்படும் வாரந்திர விரைவு ரயிலில், ஏப்., 26ம் தேதி வரை 3ம் வகுப்பு மூன்று ‘ஏசி’ பெட்டிகளும், ஒரு முன்பதிவு பெட்டியும் இணைத்து இயக்கப்படும்.
* தாம்பரம் – மதுரை இடையே வெள்ளி, ஞாயிறுகளில் இயக்கப்படும் வாரந்திர விரைவு ரயிலில் இன்று முதல் ஏப்., 27ம் தேதி வரை 3ம் வகுப்பு மூன்று ஏசி பெட்டிகளும், ஒரு முன்பதிவு பெட்டியும் இணைத்து இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.