கவர்னரின் கார் ஓட்டுநர் மயங்கி விழுந்து மரணம்
கிண்டி, புதுச்சேரியை சேர்ந்தவர் வெங்கடேசன், 54. இவர், கிண்டி, கவர்னர் மாளிகையில் தங்கி, கவர்னருக்கு கார் ஓட்டுநராக பணி புரிந்தார்.
கடந்த 30 ஆண்டுகளாக பணியில் இருந்த அவர், நேற்று காலை, வீட்டிலிருந்து வெளியே நடந்து சென்றபோது, மயங்கி கீழே விழுந்தார்.
வீட்டில் இருந்தவர்கள், அதே வளாகத்தில் உள்ள மருத்துவமனைக்கு அவரை துாக்கி சென்றனர். பரிசோதனையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, அவர் உயிரிழந்தது தெரிந்தது.
கிண்டி போலீசார், அவரின் உடலை கைபற்றி, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி, விசாரிக்கின்றனர்.