திறன் பயிற்சியுடன் வேலை இளைஞர்களுக்கு அழைப்பு
சென்னை இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளித்து, தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தும் வகையில், ‘நான் முதல்வன் பினிஷிங் ஸ்கூல்’ மற்றும் பிரதம மந்திரியின் பயிற்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
* நான் முதல்வன் பினிஷிங் ஸ்கூல் திட்டத்தில், 16 – – 35 வயது உட்பட்ட இளைஞர்களுக்கு, குறுகிய கால பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற, http://candidatetnskill.tn.gov.in.skillwallet/ என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம்
* பிரதம மந்திரி பயிற்சி திட்டத்தில், மென்பொருள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், 12 மாத கட்டணமில்லா பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்ப வரை, 21 – 24 வயதுடைய மாணவர்கள் பங்கேற்கலாம்.
இத்திட்டத்தில் பயன்பெற, http://pminternship.mca.gov.in/login/ என்ற இணையத்தில் பதிவு செய்யலாம்.
கிண்டி அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் இன்று முதலும், வடசென்னை பயிற்சி நிலையத்தில், 11ம் தேதியான நாளை முதலும் பயிற்சி துவங்குகிறது. காலை 10:00 முதல் 5:00 மணி வரை பயிற்சி நடைபெறும்.
பயிற்சியில் சேருவோருக்கு, மாதம் 5,000 ரூபாய் ஊக்கத் தொகையாகவும், ஒரு முறை மானியமாக, 6,000 ரூபாயும் வழங்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு, 044 – 2520 1163, 73582 74627, 99466 40017 என்ற எண்களில் தொடர்புக் கொள்ளலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.