நாளை அதிகாலை முதல் மாலை வரை பீச் – செங்கை தடத்தில் ரயில்கள் ரத்து

சென்னை, கடற்கரை – எழும்பூர் இடையே 4வது புதிய ரயில் பாதையின் இறுதிக்கட்ட பணிகள், நாளை நடக்க உள்ளன. இதனால், கடற்கரை – தாம்பரம், செங்கல்பட்டு தடத்தில் அதிகாலை 5:10 மணி முதல் மாலை 4:10 மணி வரை என, 11 மணி நேரம் மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது.

இருப்பினும், பயணியர் வசதிக்காக, தாம்பரம் – கோடம்பாக்கம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மேலும், மாலை 4:10 மணிக்கு பின், வழக்கமான மின்சார ரயில்கள் இயக்கப்படும்

★ கோடம்பாக்கம் – தாம்பரம் இடையே காலை 5:15 மணி முதல் மாலை 4:15 மணி இடையே 23 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன

★ தாம்பரம் – கோடம்பாக்கம் இடையே அதிகாலை 4:10 மணி முதல் மாலை 3:45 மணி இடையே 23 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளன

★ தாம்பரம் – செங்கல்பட்டு இடையே காலை 5:50 மணி முதல் மாலை 4:25 மணி இடையே 22 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன

★ திருமால்பூர், செங்கல்பட்டு – தாம்பரம் இடையே காலை 4:00 மணி முதல் மதியம் 2:25 மணி இடையே 24 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளன என, சென்னை ரயில்வே கோட்டம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *