ஆற்றங்கரையில் வசித்தவர்களுக்கு மாற்று வீடு வழங்கல்
சைதாப்பேட்டை, அடையாறு மண்டலம், 169வது வார்டு, சைதாப்பேட்டை, சத்யாநகரில் அடையாறு ஆற்றை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளனர்.
மொத்தம் 184 பேருக்கு மாற்று வீடு வழங்க, ‘பயோமெட்ரிக்’ கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 153 பேர் உரிய ஆவணம் சமர்ப்பித்தனர்.
அவர்களுக்கு, பெரும்பாக்கத்தில் வாரிய குடியிருப்பில் வீடு வழங்கும் பணி துவங்கியது. நேற்று, 60 பேருக்கு வீடு வழங்கப்பட்டது. மீதமுள்ளவர்களுக்கு அடுத்தடுத்த நாட்களில் வீடு வழங்கப்படும் என, அதிகாரிகள் கூறினர்.