போதைப்பொருள் வழக்கில் மேலும் ஒரு நைஜீரியர் கைது

சூளைமேடு காவல் நிலைய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார், ஜனவரி 25ல், கோகைன் போதைப் பொருள் வைத்திருந்த, சாலிகிராமத்தை சேர்ந்த பயாஸ் அகமது, 31, சந்திரசேகர், 35, வாசில் அகமது, 26, உட்பட, 14 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து, 60 கிராம் கோகைனை பறிமுதல் செய்த போலீசார், நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நாதனியல் சுப்பிசர், 34, ஆயிரம் விளக்கைச் சேர்ந்த ராம்குமார், 37, ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த புருஷோத்தமன், 32, ஆகிய மூவரை பிப்ரவரி 26ல் கைது செய்தனர். இந்நிலையில், நைஜீரியாவை சேர்ந்த எபிரி மோசஸ் ஒக்போடோ, 30,என்பவரை, நேற்று கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *