மாஞ்சா நுால் விற்பனை தடை நீட்டிப்பு

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதியில், மாஞ்சா நுால் பயன்படுத்தி காற்றாடிகள் விட ஏற்கனவே தடை அமலில் உள்ளது. இந்த தடை வரும், ஏப்., 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த காலக்கட்டத்தில், மாஞ்சா நுால் பயன்படுத்தி பட்டம் விடுவோர், தயாரித்து விற்பனை செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஆளில்லா விமானம், டிரோன்கள் பறக்கவிடவும் தடைவிதிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு சென்னை காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *