அஞ்சல் ஆயுள் காப்பீடு புதுப்பிக்க சிறப்பு முகாம்
சென்னை:காலாவதியான பி.எல்.ஐ., எனும் அஞ்சல்ஆயுள் காப்பீடு; ஆர்.பி.எல்.ஐ., எனப்படும் ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிசிகளை புதுப்பிக்க, வரும் 1ம் தேதி முதல் மே மாதம், 31ம் தேதி வரை, அனைத்து அஞ்சலகங்களிலும் சிறப்பு முகாம்களை அஞ்சல் துறை நடத்துகிறது.
இதில், பாலிசி பிரீமியத்திற்கான காலாவதி கட்டணத்தில் சலுகைகளும் வழங்கப்பட உள்ளன.
இதன்படி, மூன்று லட்சம் ரூபாய் வரையிலான பிரீமியத்திற்கு, 25 சதவீத தள்ளுபடி வழங்கப்படும். பிரீமியத் தொகை ஒரு லட்சம் என்றால், 2,500 ரூபாய்; மூன்று லட்சம் வரை என்றால், அதிகபட்சம், 3,000 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும்.
மூன்று லட்சம் ரூபாய்க்கு மேல் என்றால், 35 சதவீத தள்ளுபடி; அதிகபட்சம், 3,500 ரூபாய் வரை கிடைக்கும்.