துாய்மை பணியாளரிடம் கத்தி முனையில் பணம் பறித்தவர் கைது

சென்னைதிருவல்லிக்கேணி, டாக்டர் நடேசன் சாலையைச் சேர்ந்தவர் சண்முகவேல், 43 ; தனியார் நிறுவன துாய்மை பணியாளர். கடந்த, 19ம் தேதி அன்று இரவு பணிமுடிந்து மெரினா நெடுங்குப்பம், 3வது தெரு வழியாக நடந்து சென்றார்.

அப்போது, மர்மநபர் ஒருவர் கத்திமுனையில், 2,500 ரூபாயை பறித்து தப்பினார். வழக்கு பதிந்து, மெரினா போலீசார் நடத்திய விசாரணையில், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ரியாஸ் பாஷா, 22 பணம் பறிதத்து தெரியவந்தது. அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

அவரிடம் இருந்து, 2,050 ரூபாய் மற்றும் கத்தி ஒன்றை பறிமுதல் செய்தனர். இவர்மீது, கொலை வழக்கு உட்பட, 10 வழக்குகள் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *