பாரில் நடனமாடுவதில் தகராறு நடிகர் ரிஷிகாந்துக்கு சரமாரி அடி உதை

சென்னை, பிப்.8: சீமராஜா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள ரிஷிகாந்த், தேனாம்பேட்டை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் பாருக்கு நேற்று முன்தினம் இரவு வந்துள்ளார். அங்கு, விடிய விடிய மது அருந்திய அவர், பாரில் இசைக்கு ஏற்றப்படி நடனமாடியுள்ளார். அப்போது, அருகில் நடனமாடிய ஹரிஷ் என்ற வாலிபரை பார்த்து நடிகர் ரிஷிகாந்த் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கும் நிலைக்கு சென்றுள்ளனர். அப்போது பாரில் பாதுகாப்பு பணியில் பவுன்சர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து நடிகர் ரிஷிகாந்த் ஓட்டலில் இருந்து தனது காரில் வீட்டிற்கு புறப்பட்டு செல்ல முயன்றார். அப்போது வாலிபர் ஹரிஷ், பின் தொடர்ந்து நடிகரின் காரை வழிமறித்து நடிகர் ரிஷிகாந்தை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் ரிஷிகாந்துக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார், ஹரிஷை கைது ெசய்தனர். இந்த சம்பவத்தால் நேற்று அதிகாலை அண்ணா மேம்பாலம் அருகே பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *