ரூ.7 கோடி தாய்லாந்து கஞ்சா கடத்தல்
சென்னை: தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் இருந்து, சென்னைக்கு நேற்று காலை பயணியர் தனியார் விமானம் வந்தது. அதில் வந்த, 30 வயதான வாலிபர் மீது, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரின் உடமைகளை சோதனை செய்தனர்.
மூன்று பார்சல்களில், ஏழு கோடி ரூபாய் மதிப்புள்ள, உயர் ரக கஞ்சாக கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. அவரை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.