கோவில் இடத்தில் கட்டடங்கள் திறப்பு
சென்னை,திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, 18 இடங்களில் உள்ள சிதிலமடைந்த குடியிருப்புகளை அகற்றி, வணிக வளாகம், குடியிருப்புகள் 15 கோடி ரூபாயில் அமைக்கப்படும் என, சட்டசபையில், அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மூன்றரை கோடியில் கட்டப்பட்ட கட்டடங்கள் திறக்கப்பட்டன.
இந்நிலையில், சேப்பாக்கம், அய்யாப்பிள்ளை தெருவில், 94 லட்சம் ரூபாயில் கட்டப்பட்டுள்ள ஆறு குடியிருப்புகளை கொண்ட கட்டடம்; முத்துகாளத்தி தெருவில், 94 லட்சம் ரூபாய் செலவில் மூன்று குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
இவற்றை துணை முதல்வர் உதயநிதி நேற்று திறந்து வைத்தார்.