3.63 கோடி கிலோ குப்பை அகற்றம்

சென்னை: மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பு:

சென்னை மாநகராட்சி பகுதிகளில், ஜன., 7ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை அனைத்து மண்டலங்களிலும், குப்பைக் கழிவு அகற்றும் பணி நடந்து வருகிறது. இரண்டு கட்டங்களாக நடந்த குப்பை அகற்றும் பணியில், 3.63 கோடி கிலோ குப்பை மற்றும் கட்டட கழிவு அகற்றப்பட்டுள்ளது. அவை, பெருங்குடி, கொடுங்கையூர் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *