தெருவோர வியாபாரிகளுக்கு நாளை முதல் அடையாள அட்டை
சென்னை:சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சாலையோர வியாபாரிகளின் விற்பனையை ஒழுங்குபடுத்துவதற்காக, புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை, 18,398 சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது.
நாளை முதல், பிப்., 15 வரை, வார்டு அலுவலகங்களில், சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை இறுதிக்கட்டமாக வழங்கப்படும். புதிய அடையாள அட்டையை வேலை நாட்களில் பெற்றுக் கொள்ளலாம்.