ஆதம்பாக்கத்திற்கு இன்ஸ் ., நியமனம்
ஆதம்பாக்கம் காவல்நிலைய பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் சரவணன், போதை வஸ்துக்கள் விற்பனை செய்யும் கும்பலுடன் பேச்சு நடத்த கூட்டம் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், அவருக்கு பதிலாக ஆதம்பாக்கம் காவல்நிலைய இன்ஸ்பெக்டராக பலவேசம் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.