போதையால் விபரீதம் தவறி விழுந்து வாலிபர் பலி
தாம்பரம், நெய்வேலியைச் சேர்ந்தவர் முருகன், 34. தாம்பரத்தில் தங்கி கட்டட வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, தாம்பரம், முடிச்சூர் சாலையில் உள்ள இரண்டு மாடி கட்டடத்தில், மது அருந்திவிட்டு மாடியில் படுத்து துாங்கினார்.
இந்த நிலையில், நேற்று அதிகாலை மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். தாம்பரம் போலீசார் உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
பிளம்பர் காயம்
சைதாப்பேட்டை, திவான் பாட்ஷியம் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ், 58; பிளம்பர். இவர் சகோதரர் வீட்டில் இரண்டாம் தளத்தில் தனியாக வசிக்கிறார். நேற்று முன்தினம் இரவு, மது போதையில் மாடிக்கு சென்றார். அங்கிருந்து கால் தடுக்கி கீழே விழுந்ததில், பலத்த காயம் ஏற்பட்டது.
ராயப்பேட்டை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். சைதாப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.