சில்லரை காசுகள் தருவதாக ரூ.11,000 பறிப்பு

கே.கே., நகர், .கே.நகர் பி.டி.ராஜன் சாலை, 20வது அவென்யூவில், ‘ரெடி’ சூப்பர் மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு, ராஜா, 20, என்பவர் சூப்பர்வைசராக பணி புரிந்து வருகிறார்.

நேற்று முன்தினம் மாலை சூப்பர் மார்க்கெட் தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர், தன்னிடம் 10 மற்றும் 5 ரூபாய் நாணயங்கள் இருப்பதாகவும், உங்களுக்கு சில்லரை தேவைப்பட்டால் கூறுங்கள் எனக் கேட்டுள்ளார்.

அதற்கு ராஜா சில்லரை காசு வேண்டும் எனக் கூறியதையடுத்து, அந்த நபர் கடைக்கு வந்துள்ளார். இந்த நிலையில், சில்லரை தன் கடையில் இருப்பதாகக் கூறி, ராஜாவை அவரது பைக்கில் அழைத்துக் சென்றார்.

வடபழனி சிவன் கோவில் அருகே சென்றபோது, ‘பணத்தை கொடுங்கள். நான் சில்லரை எடுத்து வருகிறேன்’ என, கூறியுள்ளார். ஆனால், ராஜா பணம் தர மறுக்கவே, அவரிடம் இருந்த 11,000 ரூபாய் பறித்து தப்பினார்.

இதுகுறித்த கே.கே., நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *