புது வண்ணையில் மீனவர் வெட்டி கொலை

புதுவண்ணாரப்பேட்டை, நாகூரான் தோட்டத்தைச் சேர்ந்தவர் வினோத், 33; மீனவர். இவர் நேற்று இரவு தன் வீட்டருகே நின்றிருந்தபோது, அவ்வழியே வந்த மூவர் கும்பல், வினோத்தை, கிரிக்கெட் பேட் மற்றும் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர்.

இதில், தலை மற்றும் முகத்தில் படுகாயமடைந்த வினோத், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *