பாட்டியை தாக்கிய பேரனின் நண்பர்கள் கைது

ஆர்.கே.நகர், கொருக்குப்பேட்டை, கோவிந்தசாமி நகரைச் சேர்ந்தவர் கோவிந்தம்மாள், 52. இவரது பேரன் மோகன், வேலைக்கு சரிவர செல்லாமல், அவரது நண்பர்களுடன் மது அருந்தி சுற்றித் திரிந்துள்ளார்

கோவிந்தம்மாள், பேரன் மோகன் மற்றும் அவரது நண்பர்களை கண்டித்துள்ளார். ஆத்திரமடைந்த மோகனின் நண்பர்கள், அரிபாபு, சதீஷ்குமார், பிரேம்குமார், சூர்யா ஆகிய நால்வரும், கடந்த 8ம் தேதி இரவு, கோவிந்தம்மாள் வீட்டிற்கு சென்று அவதுாறாக பேசி தாக்கிவிட்டு தப்பினர்

இது குறித்து விசாரிக்கும் ஆர்.கே.நகர் போலீசார், தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில், கொருக்குப்பேட்டை, பெரியார் சாலையைச் சேர்ந்த சதீஷ்குமார், 22, பிரேம்குமார், 24, ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான இருவரையும் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *